Friday, August 28, 2015

Go Live


புதிய தொலைக்காட்சி பெட்டி வந்து இறங்கியது. மணியனுக்கு அதில் காட்டூன் சேனல்களை பார்க்க வேண்டும் என கொள்ள ஆசை. ஆனால் அவன் அப்பா விடவில்லை. இது விசேஷமான தொலைக்காட்சி குழந்தைகள் தனியாக பார்க்ககூடாது என்று சொல்லிவிட்டார். யாரும் ஹாலில் இல்லாத சமயம் அவன் டீவியை ஆன் செய்தான். நேராக காட்டூன் சேனல் ஒன்றிற்கு மாற்றினான். சோட்டா பீம் போய்க்கொண்டு இருந்தது. ரிமோட்டில் "Go Live" என்று ஒரு பொத்தன் இருந்தது. அதனை எதேர்ச்சையாக அழுத்தினான். சில நொடிகளில் திரையில் பார்த்த சோட்டாபீம் டீவியில் இருந்து இறங்கி ஹாலுக்கு வந்துவிட்டான். "உன் பேரு மணியன் தானே" என்றான் சோட்டாபீம். தூக்குவரிப்போட்டது மணியனுக்கு. டீவியில் இருந்து வீட்டிற்கு வந்ததும் இல்லாமல் தன் பெயரும் தெரிந்திருக்கின்றதே என ஆச்சர்யம். இவன் பேசுவதற்குள் "மணியன், எனக்கு ரொம்ப பசிக்குது ஒரு இருபது லட்டு எடுத்துகிட்டு வாயேன். அம்மாகிட்ட கேளு மேல ஒரு டப்பாவில் இருக்கு" என்றான்.

கைகள் நடுக்கியபடியே டீவியில் சேனலை மாற்றினான். காட்டூனில் இருந்து வேற சேனலுக்கு மாறிவிட்டது. டக்கென சோட்டா பீமும் மறைந்துவிட்டான். அப்பாடி என நினைத்து கண் மூடினான். அப்போது தான் மூச்சு திரும்ப வந்தது, திடீரென உர் உர் என்று உறுமல் சத்தம். அதுவும் புலியின் உறுமல் போல இருந்தது. அவன் மாற்றியது டிஸ்கவரி சேனல்.



===========================

அந்த குட்டி சிறுவன் ஒரு சகோதரியின் மகன். மெல்லிய ADD - Attention deficit disorder. அவன் மீது எனக்கு எப்போதும் அதிகப்படியான அன்பு உண்டு. நேரில் பார்த்ததில்லை என்றாலும் தினசரி அவன் செய்கைகள் எனக்கு பகிரப்படும். இந்த Go Live (ரொம்ப குட்டி கதை -001) கதையை கேட்டு அவன் கதையை விரிக்கின்றான்.. அடுத்த டாம் & ஜெர்ரிக்கு சேனல் மாறுகின்றது. டாம் முதலில் சீஸ் கேட்கின்றது. பிறகு ஜெர்ரிக்கும் சீஸ் தரும்படி கேட்கின்றதாம்.( சிறு குழந்தை என்றாலும் அவனுக்கு தெய்வ பக்தி அதிகம்) சேனர் TTDக்கு மாறுகின்றது. திருப்பதி தேவஸ்தல நிகழ்ச்சி. வெங்கடாசலபதியும் அவர் நண்பர்களும் மணியனை பார்க்க வருகின்றர்கள். இந்த சிறுவன வெங்கடாசலபதியுடன் விளையாட மணியன் கடைக்கு நண்பர்களுடன் சென்று பெயிண்ட் வாங்குகின்றார்கள். பிறகு மணியனை விட்டுவிட்டு திருப்பதி சென்றுவிடுகின்றார்கள்.

இந்த மெசேஜ்களை படித்துவிட்டு வெகுநேரம் எந்த வேலையும் ஓடவில்லை. “நன்றி சகோ” என கடைசியில் அவனுடைய தாய் மெசேஜ் செய்திருந்தார். என்ன சொல்றதுன்னு தெரியல சார். பசங்களுக்கு நிறைய கதை எழுதனும்னு மட்டும் தோனுச்சு.



No comments:

Post a Comment