Friday, August 28, 2015

நீநிஜூஜூவின் சாகச பயணங்கள் - குழலி


    நீநிஜூஜு என்ற சிறுமி  ஒருத்தி இருந்தாள்.  அவள் ஒரு மாயச் சிறுமி, மந்திரங்கள் தெரிந்தவள். அவளுக்கு அடுக் என்ற சிறுவனும், குடுக் என்ற ஒரு தேவதைப் பெண்ணும் நண்பர்களாக இருந்தார்கள். நீநி இவர்களைவிட ஒரு வயது பெரியவள். இவர்கள் நம்முடைய உலகத்தில் தான் வாழ்கின்றார்கள். அவர்களை நம்மால் பார்க்க முடியாது. அது ஒரு சுவையான மாய உலகம்.  நீநி பதமா சுப்பிரமணி பால என்ற ஒரு பள்ளியில் படிக்கிறார்கள்.  அது எங்கே இருக்கின்றது என்று யாருக்குமே தெரியாது.  ஆனால் அந்தப் பள்ளி நிச்சயமாக இருக்கிறது, ஏனெனில் இவர்கள் தான் தினமும் சீருடை அணிந்து செல்கின்றார்களே.  

    இவர்கள் மூவருக்கும் மற்றும் ஒரு நண்பர் உண்டு.  அது ஒரு யானை. அந்த யானையின் பெயர் குல்பி.  நீநி, அடுக் மற்றும் குடுக் மூவரும் குல்பி மீது அமர்ந்து காட்டில் உலா வருவார்கள்.  குல்பி மிக வேகமாக நடக்கும். ஒரு மணி நேரத்தில் காட்டையே ஒரு சுற்று சுற்றி வந்துவிடும், மற்ற யானைகளை விட உருவத்தில் மிகவும் பெரியது.  பெரிய தொப்பையும் வைத்திருக்கும்.  ஒரு நாள் நீநிஜூஜு, குல்பியை தன் குட்டி வீட்டிற்கு அழைத்து சென்றாள். குட்டி வீடு என்பதால் குல்பி உள்ளே நுழைந்தவுடன் அந்த வீடு உடைந்து விட்டது.  டமால் என்ற பெரும் சத்தத்துடன்.  அடுக்கும் குடுக்கும் நீநியை சமாதானம் செய்து ‘நண்பா அழாதே நாம நாலு பேரும் பால் ஊருக்கு போகலாம் வாங்க’ என்று கூறினார்.  

    அந்த ஊரின் பெயர் “Ball” (பந்து). ஆமாம் பால் தான்.  அந்த ஊரில் வீடுகளே இல்லை எல்லாமே பந்து தான்.  பந்திற்குள் தான் தங்கிக்கொள்ள வேண்டும், இல்லை இல்லை பந்து தான் வீடே. பந்துகள் வேறு வேறு அளவிலும், பலவித வண்ணங்களிலும் இருக்கும்.  ஊருக்குள் வந்தவுடன் ஒரு கவுண்டரில் சென்று என்ன அளவில், என்ன வண்ணத்தில் பந்து வேண்டும் என்று சொல்ல வேண்டும்.  உடனே கேட்ட அளவில், கேட்ட வண்ணத்தில் ஒரு பந்து தயாராகும்.  அந்த கவுண்டரும் பந்து தான்.  இந்த ஊருக்கு வந்தவுடன் பந்து போன்ற ஆடைகளை போட்டுக்கொள்ள வேண்டும்.  பேருந்துகளும் பந்து வடிவத்தில் தான் இருக்கும்.  

     நீநியும் அவள் நண்பர்களும் பால் ஊருக்கு பறந்து வந்து சேர்ந்தனர்.  ஊரைச் சுற்றி பார்த்தார்கள்.  அவர்களுக்கு மிகவு பிடித்துவிட்டது.  நீநி பிங்க் நிற பந்தையும், அடுக் வெள்ளை நிற பந்தையும், குடுக் கறுப்பும் சிவப்பும் கலந்து பந்தையும், பெற்றனர்.  குல்பியின் பந்தை தயாரிக்க தான் நேரம் பிடித்தது.  அது கேட்ட இளம் பச்சை நிற பெயிண்ட் வேறு காலியாகி இருந்தது. அதுவும் இல்லாமல் பெரிய அளவு வேறு அல்லவா.

      நால்வரும் அவர்களுடையை பந்துகளை தள்ளிக்கொண்டு ‘Round’ வீதி என்ற சாலைக்கு வந்து சேர்ந்தனர்.  வெகு தூரம் பயணம் செய்து வந்ததால், சீக்கிரமே தூங்கிவிட்டனர்.  மறுநாள் காலை குல்பி தான் மற்ற மூவரையும் எழுப்பியது.  

    ‘நணபர்களே, பசிக்கிறது வாங்க, சாப்பிட போகலாம்’ என்றது.  மற்ற மூவரும் கொஞ்ச நேரத்தில் தயாராகி ஓட்டலுக்கு சென்றனர்.  ஓட்டலும் பந்து வடிவில் தான் இருந்தது.  இருக்கையும் பந்து, மேஜையும் பந்து, என்ன சாப்பாடு இருக்கிறது என்று கேட்கும் முன்னரே மேஜையில் உணவு பரிமாறப்பட்டது.  

        நல்லவேளை தட்டு நம்ம ஊர்களில் இருப்பது போல இருந்தது.  அதில் வட்டமான ஒரு விநோத காய் அரிந்து வைக்கப்பட்டு இருந்தது.  குல்பி கட கடன்னு சாப்பிட்டு விட்டது.  அடுக்கும் குடுக்கும் கூட சாப்பிட்டாங்க தண்ணீர் பாக்கேட்டும் அங்கே பந்து வடிவத்தில் தான் இருந்துச்சாம்.

      ‘ஏய் நண்பா, ஏன் சாப்பிடல’ என்றி நீநியை மூவரும் கேட்டாங்களாம்.

    ‘எனக்கு இந்த சாப்பாடு பிடிக்கல கூடா இட்லியும் சிக்கன் குழம்பும் வேணும்’ன்னு நீநி சொன்னாளாம். சரி இப்ப கிடைப்பதை சாப்பிடு அப்புறமா நீ கேட்டதை தேடலாம் என்று நண்பர்கள் தேற்றினார்கள்.

      ஓட்டலில் கேட்டுப் பார்த்தாங்க, ஆனா அங்கே கிடைக்கல.  மஞ்சள் கலரில் இருந்த உருண்டையான டாக்ஸியில் ஏறி சிக்கன் குழம்பும் இட்லியும் கிடைக்கும் ஓட்டலை தேடினாங்க.  சில ஓட்டலில் சிக்கன் அப்படின்னாலே என்னான்னு தெரியல.  சில கடையில் இட்லின்னா என்னான்னு தெரியல.  அது என்ன இத்தாலியில் கிடைக்கும் சாப்பாடான்னு கேட்டாங்க.

      பந்து ஊரின் மூளை முடுக்கொல்லாம் சுத்தியாச்சு, ஆனா விவரம் எதுவுமே கிடைக்கல.  ரொம்ப சோர்ந்து இருந்த சமயம் தான் அந்த இசை கேட்டது.  எல்லோரையும் மயக்கிற மாதிரியான இசை அது.  ஆமாம் நீநி கண்டுபிடிச்சிட்டா, அது அவளோட அண்ணன் பீப்பியோட இசை.  அவன் ஒரு வீதிப் பாடகன்.  பெயர் பீப்பி.  பீப்பி ஊதுவதால் அவனுக்கு அந்த பெயர் வந்துடுச்சு.  அவன் ஊர் ஊரா பீப்பி ஊதிகிட்டே சுத்திகிட்டே இருப்பான்.  ‘பீப்பி அண்ணா………’ என கத்தினாள் நீநி.

      ஏன் சோகமா இருக்க நீநின்னு கேட்டு, அவளுடைய வருத்தத்திற்கான காரணத்தை கேட்டு அறிந்தான் பீப்பி.  கோழி குழம்பும் சூடான இட்லியும் Bat ஊரில் கிடைக்கும் வாங்க என கூட்டிக்கொண்டு போனான் பீப்பி.  பீப்பி ஊத மற்ற நால்வரும் பின்தொடர்ந்தனர்.

    Bat ஊரில் எங்கும் Batகள் தான்.  பால் ஊருக்கும் Bat ஊருக்கும் இருந்த வித்யாசம் ஒன்று தான்.  அங்கே எல்லாம் வெறும் பந்துகள் இங்கே விதவிதமான Batகள், shuttle Batகள், கிரிகெட் பேட், டென்னிஸ் பேட்கள் என்று இருந்தது.  ஒவ்வொரு ‘பேட்’டிற்கும் ஒரு தெரு.  அந்த தெருவில் அந்த வகையான பேட்கள் மட்டுமே இருக்கும்.

      இங்கும் குல்பிக்கு வீடு செய்து தருவதில் நேரமாச்சு. மற்ற மூவரும் ஒரே வீட்டில்  தங்கினார்கள். பீப்பி இவர்களை வீட்டில் தங்க வைத்துவிட்டு வீதி வீதியாக பீப்பி ஊத சென்றுவிட்டான்.  அவன் இசைக்கு எல்லா ஊரும் மயங்கியேவிடும். ஊதிக் கொண்டே ஓட்டல் ஒட்டலாக சென்று எங்கே சூடான இட்லியும் கோழி குழம்பும் கிடைக்கும் என்பதையும் கண்டுபிடித்தான்.  

    இரவாகிவிட்டது, அதனால் மறுநாள் காலையில் சாப்பிடலாம் என்று எல்லோரும் உறங்க சென்றுவிட்டனர்.  காலையில் எழுந்து பார்த்த போது தான் அந்த அதிசயம் நடந்து இருந்தது.  இரவெல்லாம் மழை பெய்து பெய்து பேட் ஊரே தண்ணீரால் நிரம்பி இருந்தது.  அவ்வளவு மழையாம்.  நிறைய்ய மழை பெய்து பக்கத்து ஊரான பால் ஊரில் இருந்து எல்லா பந்துகளும் தண்ணிரில் மிதந்து இந்த ஊருக்கு வந்துவிட்டது.  அதனால் பேட் ஊரில் சாலையில் எல்லாம் பந்துகள் வந்துவிட்டது.  பந்து வண்டிகளும் இந்த ஊருக்கு வந்துவிட்டது.     

பீப்பி மற்ற நால்வரையும் அழைத்து மெதுவாக வெளியே வந்தது.  படகு போன்ற பேட்டினை பிடித்து அதன்மீது ஏறி அந்த ஓட்டலுக்கு சென்றனர்.  ஆனால் இவர்கள் கொடுமைக்கு, அந்த ஓட்டல் பேட் அங்கே காணவில்லை மழைக்கு அடித்து சென்று விட்டது.  அட ராமா என நினைத்தது பீப்பி.  அந்த ஓட்டல் ‘பேட்’டின் அடையாளங்களை பீப்பி கூறியது.  அது ஒரு டேபிள் டென்னிஸ் பேட்.  பச்சை நிறத்தில் இருக்கும்.

      குல்பி ஒரு மந்திரத்தை சொன்னதும் அது வானம் வரை பறந்து மீண்டும் அந்த வண்டிக்கு வந்தது.  ‘பீப்பி நீங்க சொன்ன மாதிரி இன்னும் கொஞ்ச தூரத்தில ஒரு பேட் இருக்கு, வாங்க என் பின்னாடி’ன்னு சொல்லி கூட்டிகிட்டு போனதாம்.

    சரியா அந்த ஓட்டலுக்கு வந்துட்டாங்க.  அனைவரும் உள்ளே அமர்ந்து ‘சூடான இட்லுயும் கோழி குழம்பும் வேண்டும்’ன்னு கேட்டாங்க.  இதோ ஒரு நொடியிலன்னு சொல்லி சாப்பாடு வந்து, மம்மம்ன்னு எல்லோரும் சந்தோஷமா சாப்பிட்டாங்க.  நீநி வாவ்  என்று ரசித்து சாப்பிட்டாள்.

    வெளிய வந்து பார்த்தா எல்லா தண்ணியும் காணோம்.  குல்பி பாண்டான்னு ஒரு சிங்கம் எல்லா தண்ணியையும் குடிச்சிடுச்சு.  ‘நீநி உங்க கிளால் மிஸ் உன்னை தேடிகிட்டு இருந்தாங்க, சீக்கிரம் கிளம்பு’ன்னு குல்பி பாண்டா சொன்னதும் எல்லாரும் ஊருக்கு கிளம்பி வந்துட்டாங்க.

அவ்ளந்தான்.      



   

No comments:

Post a Comment