Friday, August 28, 2015

தேவதைகள்_வாழும்_வீடு‬


செழியன் உறங்கிவிட்டான். குழலி ஒரு கதையை ஆங்கிலத்தில் கூற முயற்சித்தாள். ஒரு வரியை சொன்னதும் அதில் இருக்கும் தவறு என்ன? எப்படி வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்று வித்யா விளக்கிக்கொண்டிருந்தாள். அங்கிருந்து எங்கு எங்கோ சென்றது. கதையை முடிக்கவில்லை. சில கணக்கு புதிர்களை அவர்கள் இருவரும் விளையாடினார்கள். கூட்டல் தான். குழலி எதிர் புதிர்களை போட்டாள். பதில் சொன்னதும் சரியா என அவளே கூட்டி சரிபார்த்தாள். கணக்கு என்றால் எனக்கு கொள்ளை ப்ரியம். 'நான் ஒரு கணக்கு பைத்தியம்' என்ற நூலுக்கான அடிப்படை வேலைகள் ஸ்கெட்ச் எல்லாம் போட்டு அப்படியே நிற்கின்றது. கணக்கினை எப்படி வாழ்வின் எல்லா இடத்திலும் பார்க்கலாம் எண்களுடன் எப்படி விளையாடலாம் என்பதே அந்த புத்தகம். அதில் முதல் பக்கமே திகிலானதாக இருக்கும். ஆசிரியர்கள் இருவர் - உமாநாத் & விழியன்.

குழலிக்கு கணக்கின் மீது ப்ரியம் வரவேண்டும் என வித்யாவிடன் சில புதிர்களை போட்டுக்கொண்டிருந்தேன். கடைசியாக "ஒரு ப்ரிட்ஜ் இருக்கு. அதுனுடைய ஆரம்பத்தில ஒரு லாம்ப் போஸ்ட் இருக்கு.சீரான இடைவெளியில் மொத்தம் பத்தி லாம்ப் போஸ்ட் இருக்கு. பத்தாவது லாம்ப் போஸ்ட் ப்ரிட்ஜ்ஜோட அந்த முடிவில் இருக்கு. ரெண்டு பக்கம் இருந்தும் ஒவ்வொரு வண்டி ஒரே வேகத்தில வருது. ரெண்டும் எங்க மீட் பண்ணும்?"

வித்யா சில நொடிகள் எடுத்துக்கொண்டாள். குழலி திடீரென "அப்பா எனக்கு தெரியும்.சொல்லட்டா?"

"சொல்லு பாக்கலாம்"

"ப்ரிட்ஜ்ல.."



‪#‎தேவதைகள்_வாழும்_வீடு‬



No comments:

Post a Comment