சாக்பீஸை கையில் எடுத்திருக்கிறார் செழியன். வீடு முழுக்க கோடுகள் தான். நேற்றி கட்டிலில் அமர்ந்து சுவற்றில் கிறுக்கிக்கொண்டிருந்தான். என்ன வரையற செழியன் என்றதற்கு “கோடு” என்றான். கைகளை அகல நீட்டி அமரச்செய்துவிட்டு இடதுகை நடுவிரல் நுனிமுதல் வலதுகை நடுவிரல் நுனி கோடு போட்டான். “அப்பா, அவன் கிறுக்குறான்பா” என்று குழலி கம்ளையிண்ட். “உன்னைவிட குறைவா தான் கிறுக்குறான். ஹால் முழுக்க கிறுக்கினவ நீ”. சர்கிள் போடு செழியன் என்றேன். நேராக கோடு கிழித்து சர்கிள் என்றான். தற்சமயம் கோடுகளால் ஆனது அவனுலகு. குழலி கிறுக்கியபோது எழுதிய கவிதை ஒன்று நினைவிற்கு வந்தது.
கோடுகளும் அவளும்
——————————————
பென்சில் பிஞ்சுவிரலில் தவழ்கின்றது
சுற்றி சுற்றி கோடுகள் பிறக்கின்றது
”கண்டுபிடிங்க பார்க்கலாம்” என்கிறாள்
சிங்கம் – இல்லை
மான் – இல்லை
மயில் – ஆமாம்
வேகமாக தலையசைக்க
கோடுகள் வளைந்து நெளிந்து
அவள் அசைத்ததற்கு மாறிக்கொண்டன
——————————————
No comments:
Post a Comment