Friday, August 28, 2015

உருமாறும் நண்பன்


பள்ளியில் இருந்து வீடு திரும்பிய அபிநயா சோகமாக இருந்தாள். பள்ளியில் தன் தோழியுடன் சின்ன சண்டை. தன்னுடைய அறைக்கு வந்து அவளுடைய நண்பர்கள் எங்கே என தேடினாள். “மேகம்...மேகம்” என அழைத்தாள். பீரோவிற்கு பின்னால் இருந்து சொயிங் என உத்திரத்திற்கு சென்றன. சோகமாக இருந்ததை புரிந்து கொண்ட மேகங்கள் அவளுக்கு விளையாட்டு காட்டின. விதவிதமான உருவங்களாக மாறின. ஓடும் சிங்கம், குதிக்கும் யானை, பெரிய்ய்ய்ய மீன். அம்மா வந்து இரவு உணவினை ஊட்டிவிட்டு சென்றாள். “காலையில சீக்கிரம் எழுந்துக்கோ அபிநயா, ஓட்டப்பந்தையம் இருக்கு. காலையில 5 மணிக்கு எழுந்துக்கோ” எனச் சொல்லிவிட்டு போய்விட்டாள். தூங்க நேரமாச்சு நீங்க போங்க என்றாள். மேகங்கள் போகவேயில்லை. “சொல்றேன் இல்ல, போங்க” என்றாள். சன்னலை திறந்துவைத்தாள். மேகங்கள் வெளியே போவதற்கு பதிலாக தன்னுடைய மற்றொரு நண்பன் தென்றலை சன்னல் வழியே அழைத்தனர். தென்றல் வந்ததும் சில நிமிடங்களில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டாள் அபிநயா. உறங்கும் முன்னர் காலையில 5 மணிக்கு எழுந்துக்கனும் 5 மணிக்கு எழுந்துக்கனும் என முனுமுனுத்தாள்.

சரியாக காலை ஐந்து மணிக்கு அபிநயா விழித்தாள். தானாக விழிக்கவில்லை யாரோ அவள் முகத்தில் தண்ணீர் அடித்ததால் விழித்தாள். “டொக் டொக் டொக்” என கதவு தட்டும் சத்தம். “அபிநயா, அங்க உன் அறையில் என்ன இடி சத்தம்?”. மேகங்கள் அறையில் காணவில்லை.



No comments:

Post a Comment