Friday, August 28, 2015

டங்


போட்டியாளர்கள் எல்லாம் வந்துவிட்டார்களா என ஒருங்கிணைப்பாளை சரி சார்த்துக்கொண்டிருந்தார். ஒருவர் மட்டும் வரவில்லை. அது குண்டு எரிதல் போட்டி. காட்டில் நடக்கும் விளையாட்டு தினத்திற்காக இந்த போட்டி நடைபெறுகின்றது. மிகிகா என்ற மனிதக்குரங்கு, டாம்பு என்ற கங்காரு, கிங்கு என்ற கருங்குரங்கு முக்கிய போட்டியாளார்கள். மூவரும் இந்தியாவின் மற்ற காடுகளில் நடக்கும் குண்டெறிதல் போட்டியில் பல பரிசுகளை வென்று இருக்கின்றர்கள். குண்டு எரிதல் போட்டியில் பெரிய குண்டு இருக்கும் அதனை யார் வெகுதூரம் வீசுகின்றார்களோ அவர்களே வெற்றிபெற்றவர். மிகிகா தான் போட்டியில் வெல்லும் என கூடி இருந்த பார்வையாளர்கள் பேசிக்கொண்டார்கள். அந்த ஒரே ஒரு போட்டியாளர் வரவில்லை என்று இன்னும் போட்டி ஆரம்பிக்கவில்லை. அந்த போட்டியாளர் விளையாட்டு திடலுக்கு நுழைந்தார். அவர் அணில். பெரிய அணில் கூட அல்ல, குட்டி அணில். அரங்கமே சிரித்தது இந்த அணிலால் குண்டை தூக்க கூட முடியாது இது போய் எப்படி போட்டியில் கலந்துகொள்ளும் என கிண்டல் அடித்தார்கள்.

மிகிகா, கிங்கு, டாம்பு என எல்லோரும் குண்டு வீசிவிட்டார்கள். மிகிகா தான் அதிக தூரம் வீசி இருந்தது. அந்த அணில் குண்டு வீச வந்தது. கெக்கெக்கே கெக்கே என அரங்கம் சிரித்தது. “பம்பம்போலே பல்பம்போலே” என சொல்லிவிட்டு குண்டினை கஷ்டப்பட்டு எடுத்தது. மூன்று முறை சுற்றிவிட்டி ஸ்வயிங் என வானத்தில் அந்த குண்டை வீசியது. 1 நிமிடம், 2 நிமிடம், 4 நிமிடம், 1 மணி நேரம் பார்த்தார்கள், குண்டு கீழ விழவே இல்லை. ஒரு நாள் பார்த்தார்கள் அப்போதும் கீழே விழவில்லை. மூன்று வாரம் கழித்து ஆப்ரிக்கா காட்டில் “டங்” என பெருத்த சத்தம்.



No comments:

Post a Comment