Friday, August 28, 2015

பூ பூ மிக்கி ஸ்பெஷல்


செழியனிடம் பசிக்குது என்றேன். உடனே ஸ்ஸ்ஸ்ஸ் என சத்தம் போட்டுவிட்டு “தோச” என நீட்டினான். நானும் சாப்பிட ஆரம்பித்தேன். “தொட்டுக்க?” என்றேன். சாம்பார் செய்து தருவான் என நினைத்தேன். தோசை சுடுவதை போல ஏதோ செய்து “இட்லி” என கொடுத்தான். “டேய் தோசைக்கு தொட்டுக்க இட்லியா? எப்படிடா சாப்பிட்றது” என்றேன். ரொம்பவே அசால்டாக “சாப்பிடுங்க” என்றான். சரியென பாதி தோசை சாப்பிட்டுவிட்டேன். குழலி பள்ளிக்கு தயாராகி எங்கள் பக்கம் வந்தாள் “குழலி, இவன் தோசைக்கு தொட்டுக்க என்ன கொடுத்தான் தெரியுமா?” என்றேன். “தெரியுமே, இட்லி” எனச் சொல்லிவிட்டு ஹாலுக்கு நகர்ந்துவிட்டாள். தோசை காய்ந்து கொண்டிருந்தது. “சாப்பிடுங்க” என பூபு குரல் கொடுக்க. நாம இன்னும் டெக்னிக்கலாவும் டெக்னாலஜியிலும் நிறைய வளரனும்னு தோனுச்சு.



No comments:

Post a Comment