Friday, August 28, 2015

'பேரு மறந்துபோச்சு' - ரஞ்சன குழலி


ஒரு ஊர்ல ஒரு பொண்ணு இருந்தா. இல்லை இல்ல அது ஊர் இல்ல, அது ஒரு காடு. அவ பேரு..'பேரு மறந்துபோச்சு'. அவன் ரொம்ப உயரமா இருப்பா. வானம் உயரம். அந்த காட்டுல எல்லோரும் மண்ணு தான் சாப்பிடுவாங்க. ஆனா இவ மட்டும் தான் சோறு சாப்பிடுவா. இவளுக்கு ஒரு அம்மா ஒரு அப்பா (அட). அவங்க அம்மா இவளை தேடிட்டு இருந்தாங்க. "செல்லம்மா, கண்ணு..எங்க இருக்க..வந்து சாப்பிடு..". "இதோம்மா, மேகத்தோட விளையாடிட்டு இருக்கேன். வரேன்"ன்னு சொன்னாளாம். அவளோட பேர நீங்க கேட்கவே இல்லையே. மறந்துட்டீங்களா? அவ பேரு 'பேரு மறந்துபோச்சு'

அவங்க அப்பா அம்மா குட்டியா நம்மள போலத்தான் இருப்பாங்க. அவ மட்டும் பெருசா இருப்பா. அவ பெருசா இருந்து குட்டியா மாற 'ஜீபூம்பா' சொல்லுவா. ராத்திரி தூங்கும்போது குட்டியா மாறி வீட்ல படுத்துப்பா. திரும்ப அவ பெரிசா ஆகணும்னா 'பாம்பூஜி'ன்னு சொல்லுவா. பெருசா மாறிடுவா.

அவங்க வீட்டு பக்கத்தில அவளுக்கு ஒரு நண்பன் இருந்தான். அவன் பேரு 'வீடு'. ஆனா அவன் இருந்தது ஒரு குடிசை. அவங்க அம்மா அப்பா கூடத்தான் அவன் இருந்தான். குட்டி வயசுல இருந்து ரெண்டு பேரும் ஒன்னா தான் விளையாடுவாங்களாம்.

ஒரு நாள் 'பேரு மறந்துபோச்சு', அவ அம்மா, அவ அப்பா மூனு பேரும் வெளிய எங்கயோ போயிருந்தாங்களாம். அப்ப ஒரு திருடன் அவங்க வீட்டுக்கு வந்தானாம். சுத்தி முத்தி பார்த்துட்டு அந்த வீட்டையே திருடிட்டு போனானாம். குடிசையில இருந்து 'வீடு' இதை எல்லாம் பார்த்துட்டே இருந்தானாம். என்ன செய்யறதுன்னே தெரியலையாம்.

அப்பாவும் அம்மாவும் வெளிய போயிட்டு வந்து பார்த்தா வீட்டை காணோமாம். பேரு மறந்துபோச்சு எங்க போனான்னு தெரியலை. மேகத்தோட போய் மழைய பாக்குறதா சொல்லி இருந்தாளாம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வீட்டை எங்க தேட்றதுன்னு யோசிச்சாங்களாம். பேரு மறந்துபோச்சு எங்க வீடுன்னு பயந்துடுவாளேன்னு நினைச்சாங்களாம். அப்ப தான் 'வீடு' ஓடி வந்து திருடன் வீட்டை எடுத்துட்டு போன விஷயத்தை சொன்னானாம். சரின்னு பேரு மறந்துபோச்சோட அப்பா அம்மா, வீடு, வீட்டோட அப்பா அம்மா எல்லோரும் அவங்க வீட்டை தேடினாங்களாம். ஒரு மரத்து மேல திருடன் வீட்டை வெச்சிருந்தானாம். பசிக்குதுன்னு சமைச்சு வெச்சிருந்தானாம். இவங்களும்மும் பசியா இருந்ததால எல்லாரும் அங்க சாப்பிட்டாங்களாம். அப்புறம் எப்படி எங்க வீட்டை திருடலாம்னு செம அடி அடிச்சு திருடனை கட்டி போட்டுட்டாங்களாம்.

'அம்மா அம்மா' எங்க இருக்கீங்கன்னு 'பேரு மறந்துபோச்சு' ராத்திரி ஆனதால தேடிகிட்டு வந்தாளாம். எல்லா கதையையும் சொன்னாங்களாம். திருடன்கிட்ட 'திருடன் திருடன், இனி திருடக்கூடாது சரியா?'ன்னு சொல்லி கயிற கழற்றிவிட்டுட்டாளாம். எல்லாரும் மரத்தில இருந்து வீட்டை குடிசை பக்கத்தில போய் வெச்சாங்களாம். 'அம்மா தூக்கம் வருது தூங்கறேன்'ன்னு பேரு மறந்துபோச்சு தூங்கிட்டாளாம். திருடனும் அவங்களோடையே தூங்கிட்டானாம். அது தான் கிளைமேக்ஸ்.



No comments:

Post a Comment