Friday, August 28, 2015

மந்திர குமிழி


நீர்குமிழிக்குள் சரண் மாட்டிக்கொண்டான். வித்ரா ஊதிய அந்த நீர்குமிழியில் தான் அவன் மாட்டிக்கொண்டான். நீர்க்குமிழி காற்றில் பறக்க ஆரம்பித்தது. வித்ராவின் மொட்டை மாடியில் இருந்து அவர்கள் பள்ளியின் விளையாட்டு திடலை நோக்கி நீர்க்குமிழி பறந்துகொண்டிருந்தது. மேலே போக போக நீர்க்குமிழியும் பெரிதாகிக்கொண்டே இருந்தது. சரண் கத்துவது யார் காதிற்கும் கேட்கவில்லை. உடன் விளையாடிய சரண் எங்கே என்று வித்ரா “சரண் சரண்” என தேடிக்கொண்டிருந்தாள். சரணுக்கு குஷியாக இருந்தது. குமிழிற்குள் உட்கார்ந்து கொண்டான். அப்படியே படுத்துக்கொண்டான். எப்படி யார் கண்ணுக்கும் இந்த குமிழி தெரியவில்லை என அவனுக்கு குழப்பமாக இருந்தது. பக்கத்து தெருவில் இருக்கும் பெரிய கட்டிடத்தில் மோதச்சென்றபோது பயந்து ஒரு குதி குதித்தான். உடனே குமிழி மேலே சென்றது. அப்போது தான் அவன் குழிமியை இயக்க கற்றிக்கொண்டான். வலது கையை நீட்டியது வலது பக்கம் சென்றது இடது பக்கம் நீட்டியது இடது பக்கம் சென்றது. இப்படியே ரொம்ப உயரத்திற்கு பறந்துவிட்டான். இன்னும் கொஞ்சம் மேலே சென்றால் மேகத்தை தொட்டுவிடுவான்.

அப்போது தான் தன்னை சுற்றி கருப்பாக இருப்பதை பார்த்தான். அவனை சுற்றி பன்னிரண்டு காகங்கள். காகங்களுடைய கூர்மையான அலகுகள் குமிழியை குத்த வந்தது. திடீரென வந்த பருந்தை பார்த்து எல்லாம் ஆளுக்கொரு திசையாக பறந்து சென்றது. அப்போது ”டமார்” என்று ஒரு சத்தம்.

=========================

மந்திரக் குமிழி கதை நெகட்டிவா முடியுதேன்னு சிலர் கேட்டிருந்தாங்க. ஒரு சின்ன விளக்கம். கதை இன்னும் முடியவே இல்லை அதை பாசிட்டிவாக முடிப்பது ஒவ்வொரு குழந்தை + பெற்றோர் கடமை. டமார் என வெடித்ததும் கனவு களைந்தது என்பது ரொம்ப பழைய பாணி. அதை தவிர்க்கலாம். நான் ஒரு ரெண்டு முடிவுகளை கூறுகின்றேன். கற்பனைக்கு எல்லையே இல்லை அதனை குழந்தைகள் உங்களுக்கு உணர்த்துவார்கள்

1. டமார் என வெடித்ததும் காகங்களை துரத்திய பருத்து குமிழி வெடித்து கீழே விழ இருந்த சிறுவனை காப்பாற்றி அவன் பனியனை அலகுகளில் பிடித்து அவனை மொட்டி மாடியில் விட்டு பறந்து சென்றது.

2. கதையை நான் ஆரம்பித்த இடமே வேற. செழியனும் குழலியும் குமிழி ஊதுகின்றார்கள். மாமா வாங்கி கொடுத்த மந்திர சோப்பில் செய்த சோப்பு தண்ணீரில் தயாரித்த குமிழி அது. அதனால் தான் செழியன் அதற்குள் பறக்கின்றான். டமார் என வெடிக்கும் சத்தம் செழியனின் குமிழி வெடிக்கும் சத்தம் ஆனால் அவன் அக்கா குழலி அவனை காப்பாற்ற வருகின்றாள் வேறு ஒரு குமிழியில்.

டக்கரா?



No comments:

Post a Comment