Friday, August 28, 2015

காக்கா ஏன் கறுப்பாச்சு? (2)


(பர்மா நாட்டு நாடோடிக்கதை - Retold)

ரொம்ப காலத்துக்கு முன்னாடி எல்லா காக்காவும் வெள்ளையா இருந்துச்சுசாம். வெள்ளைன்னா அப்படி ஒரு வெள்ளை. அப்ப எல்லாம் காக்கா ரொம்ப உயரத்துக்கு பறக்குமாம். சூரியன் வரைக்கும்கூட பறந்து போகுமாம். அப்படி இருந்த காக்கா எப்படி கருப்பாச்சு? ஊங் குட்டுங்க செல்றேன்..

சூரியபூர் நாட்டோட ராஜாவுக்கு ரொம்ப வருஷம் கழிச்சு அழகான இளவரசி பிறந்தாங்க. அவங்க கொள்ளை அழகு. குழந்தையில இருந்து வீட்டை விட்டே வெளிய வரலை. நல்ல பெரிய பொண்ணான பிறகு தான் வெளிய விளையாட வந்தாங்கலாம். அவங்க பேரு அங்கிகா. அவங்க விளையாடறத பாத்த சூரியனுக்கு அவங்களை ரொம்ப பிடிச்சு போச்சாம். இளவரசிக்கும் சூரியனை பிடிச்சிடுச்சாம். தினமும் விடியற்காலையில எழுந்ததில இருந்து சூரியன் கிட்ட தான் பேசிட்டு இருப்பாங்கலாம். சூரியனும் பூமிய சுத்திக்கிட்டே இளவரசிகிட்ட பேசிட்டு இருந்ததாம். ரொம்ப நல்ல நண்பர்களா மாறிட்டாங்க. ஒரு நாள் சூரியன் இந்த இளவரசிக்கு பரிசு கொடுக்க நினைச்சுதாம்.

சூரியன் கிட்ட வரைக்கும் காக்கா பறந்துச்சு இல்லையா? அதனால சூரியன் ஒரு காக்காவ கூப்பிட்டு "காக்கா காக்கா இந்த பையில சந்தனம்,வாசனை திரவியங்கள், முத்து மாலை எல்லாம் இருக்கு, அதோ அந்த இளவரசி அங்கிகாகிட்ட கொடுத்துடு"ன்னு சொல்லிட்டு மறஞ்சி போச்சாம். சாய்ந்திரம் ஆயிடுச்சுன்னா சூரியன் தூங்க போயிடும் இல்லையா? காக்கா அந்த பைய தூக்கிகிட்டு இளவரசி இருந்த அரண்மனைய நோக்கி பறந்து போயிட்டு இருந்துச்சு.

வழியில திருமண ஊர்வலம் நடந்துகிட்டு இருக்கு. நிறைய பழங்கள்,உணவுப்பொருட்கள் எடுத்துட்டு போனாங்க போல.காக்காவுக்கு கொஞ்ச உணவாச்சும் கிடைக்குமேன்னு ஆசை. அரண்மனைக்கு போயிட்டு பைய கொடுத்துட்டு வந்தா தாமதமாகி போகும். ஊர்வலம் முடிஞ்சிடும், சாப்பாடும் காலியாகிடும். சரின்னு அந்த பைய ஒரு மரத்தில மாட்டிவிட்டு திருமண ஊர்வலத்துக்கு போச்சாம். மரத்துக்கு கீழ இருந்த ஒருத்தன் இந்த காக்கா பையை வெச்சுட்டு போனதை பாத்துகிட்டே இருந்தானாம். பையில் இருந்து நல்ல வாசனை வந்தது. அதனால மரத்தில ஏறி பைய திறந்து பாத்து இருக்கான். பைக்கு உள்ள, சூரியன் கொடுத்து அனுப்பின எல்லா பொருளையும் பாத்து சொக்கி போயிட்டானாம்.உடனே எல்லாத்தையும் எடுத்துகிட்டு மரத்தில இருந்த குப்பை எல்லாம் பையில எடுத்து போட்டுட்டு கிளம்பிட்டான்.

காக்கா கல்யாண மண்டபத்தில செம சாப்பாடு வந்துச்சாம்.  ஒரு பாட்டு வேற 'கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்..இந்த கெளரவப் பிரசாதம் இதுவே எனக்கு போதும்..  " ஏப்பம் வேற. பைய எடுத்துகிட்டு இளவரசி அரண்மனைக்கு போயிடுச்சாம்.அங்க இளவரசிகிட்ட சூரியன் கொடுத்த பைய கொடுத்துச்சாம். நமக்கு தான் பையில என்ன இருக்குன்னு தெரியுமே. திறந்து பார்த்த இளவரசிக்கு அதிர்ச்சி. ச்ச..இந்த சூரியன் ஏன் இப்படி பண்ணிடுச்சு. என் மேல அன்பே இல்ல. எல்லாம் நடிப்பு. பரிசா இந்த குப்பையா கொடுப்பாங்க. அவன் பேச்சு இனிமேல் டூன்னு சொல்லிட்டு பைய விசிரியடிச்சிடுச்சாம்.

மறுநாள் காலை,சந்தோஷமா இளவரசிய பார்க்கலாம்ன்னு வந்த சூரியனுக்கு தூக்கி வாரி போட்டுச்சாம். அந்த பை கீழ விழுந்திருந்ததை பார்த்தே ஏதோ தப்பு நடந்திருக்குதுன்னு புரிஞ்சிடுச்சாம்.பயங்கர கோபம் வந்துடுச்சாம். காக்காவை கோவமா பார்த்ததால வெள்ளையா இருந்த காக்கா உடனே கறுப்பா மாறிடுச்சாம். அதனால தான் சூரியன் கிட்டகூட பறக்க முடியாம போச்சாம். கிட்ட இருந்த சூரியனும் பூமி மேல கோபம் வந்து தூரமா போயிடுச்சாம்.

இப்ப தெரிஞ்சதா காக்கா ஏன் காக்கா கறுப்பாச்சுன்னு?



No comments:

Post a Comment