Friday, August 28, 2015

நீல நிற கலர் பென்சில்


மிதிலா அடம்பிடித்து நேற்று தான் அந்த கலர் பென்சில் டப்பாவை வாங்கினாள். வீட்டில் நிறைய கலர் பென்சில்கள் இருந்தாலும் அவளுக்கு புதிது புதிதாக வாங்க வேண்டும். காலை எழுந்ததும் அந்த கலர் பென்சில் டப்பாவை திறந்துவிட்டாள். அதன் கவரில் மொத்தம் 10 கலர் பென்சில் இருக்குமென எழுதி இருந்தது. திறந்துவிட்டு ஒவ்வொன்றாக எண்ணினாள். பத்து இருந்தது. காபி குடிக்க அம்மா அழைத்தார். சமையல் அறைக்கு சென்று குடித்துவிட்டு திரும்பினாள். திரும்பி வந்து மீண்டும் எண்ணினாள். இப்போது ஒன்பது கலர் பென்சில்கள் தான் இருந்தது. மீண்டும் மீண்டும் என்ணினாள்.ஒன்பது தான். அட்டைப்படத்தில் இருக்கும் கலர்களை பார்த்து தொலைந்து இருப்பது நீல நிறம் என கண்டுபிடித்தாள். கட்டிலுக்கு கீழே, புத்தகங்களுக்கு நடுவே, தலையணைக்கு நடுவே, தன் பள்ளிப்பை என எல்லா இடத்திலும் தேடினாள். பயனில்லை. காபி குடித்துவிட்டு வருவதற்குள் எங்கே போச்சு?

முன் அறைக்கு எதேர்ச்சையாக சென்றாள். அறையை திறந்ததும் திக் என தூக்கி வாரிப்போட்டது. அறை நீல நிறத்தில் இருந்தது. இள மஞ்சள் பெயிண்டாக இருந்தது நீல நிறத்திற்கு மாறி இருந்தது. பேன், ட்யூப்லைட், புத்தகங்கள், இருக்கை, டேபிள், புத்தகம், நோட்டு எல்லாமே நீல நிறம். காலில் ஏதோ இடறியது. பாதி அளவு இருந்த நீல நிற பென்சில் அவள் கால் பட்டு உருண்டது.



No comments:

Post a Comment