Friday, August 28, 2015

அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை


நிலாவிடன் ஏற்கனவே பேசியபடி அந்த இரவு மொட்டைமாடியில் இருந்து பட்டம் விட்டான். நிலா கொஞ்சம் கீழ் இறங்கிவந்து பட்டத்தின் ஒரு முனையை பிடித்துக்கொண்டது. நூலை பிடித்து மேலே ஏறி நிலாவில் அமர்ந்தான் சரண். நிலாவில் இருந்து பூமி சிறியதாக இருந்தது. கீழே இருந்த ஒவ்வொரு பகுதியாக காட்டியபடி வந்தது நிலா. நிலாவிற்கு சகல மொழிகளும் தெரியும் அதோ இமய மலை, அதோ சீனப்பெருஞ்சுவர், அதோ ஜப்பான், அதோ பசபிக் பெருங்கடல் என காட்டியபடியே வந்தது. முதுகில் மாட்டியிருந்த பள்ளிப்பையை கீழே இறக்கி வைத்தான். அதில் இருந்த கலர் பென்சில்களை எடுத்த “நான் சில நட்சத்திரங்களுக்கு வண்ணம் தீட்டப்போகிறேன்” என்றான். “வேண்டாம் சரண், பூமியில் இருக்கும் மக்கள் பயந்துவிடுவார்கள்” என்று சொன்னதை கேட்காமல் வண்ணம் தீட்டினான். திடீரென வானத்தில் வண்ண வண்ண நட்சத்திரங்களை பார்த்து நிஜமாகவே மக்கள் பயந்துவிட்டனர். ::உலகிற்கு ஆபத்து என கடவுளை வேண்ட ஆரம்பித்தனர். தன் பாட்டிலில் இருந்த தண்ணீரைக்கொண்டு வண்ணம் தீட்டிய நட்சத்திரங்களை கழுவினான். பூமியில் வண்ண மழை. கடல் மஞ்சள் நிறத்திற்கு மாறிவிட்டது.

கொஞ்ச நேரம் தூங்கலாம் என படுத்ததும் “ஐயோ காப்பாத்துங்க ஐயோ காப்பாத்துங்க” என அழுகை சத்தம். தீபாவளி ராக்கெட் பிடித்து ஒரு சீன சிறுவன் வானத்திற்கு வந்துவிட்டிருக்கான். ஒரு நட்சத்திரத்தில் அந்த ராக்கெட் குத்தி அந்த சிறுவன் தொங்கிக்கொண்டிருந்தான். “சரண், அந்த பையனை” காப்பாத்து என்றது நிலா



==============================

(அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை - ஜனவரி 2013ஆம் ஆண்டு வெளிவந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சிறந்த சிறுவர் இலக்கிய விருதும் பெற்றது. இது அதனுடைய ஷார்ட் வெர்ஷன்)

No comments:

Post a Comment