Wednesday, September 30, 2015

குழந்தைகளை கடிதம் எழுத வைக்க ஒரு சிறு முயற்சி


கடிதப்போக்குவரத்து கிட்டத்தட்ட் 0%க்கு சென்றுவிட்டது. ஆனால் ஒரு கடிதம் கொடுக்கும் சுகத்தை அனுபவித்த தலைமுறையினர் நாம். அந்த சுவையை அடுத்த தலைமுறையினருக்கு சிறிதளவேனும் கொடுக்க வேண்டும். உங்கள் குழந்தை கடிதம் எழுதி கிடைக்கப்பெற்றவர் பதில் அளிக்காமல் போய்விட்டால் குழந்தை வருத்தம் கொள்ளுமே என கவலை வேண்டாம். ஏனெனில் உங்கள் குழந்தை எழுதப்போகும் கடிதத்திற்கு பதில் கடிதம் போடப்போவது அடியேன் தான். எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதி அனுப்பலாம். கேட்ட கதை குறித்தோ, பள்ளி அனுபவம் குறித்தொ, விடுமுறை குறித்தோ, தன் நண்பர்கள் குறித்தோ, எதைப்பற்றி வேண்டுமானாலும் அனுப்பச்சொல்லுங்கள். 100% அதற்கு கடிதம் மூலம் பதில் கொடுப்பேன். ஒரு கடிதம் அவர்கள் பெயருக்கு வந்தால் அது கொடுக்கும் சந்தோஷம் அலாதியானது. இந்த செய்தியை பார்ப்பவர்கள் உங்களுக்கு தெரிந்த குழந்தைகளுக்கு கடிதங்களை எழுதுங்கள். இந்த முயற்சியின் நோக்கம் கடிதம் எழுதுவதை அதிகப்படுத்துவதும் அடுத்த தலைமுறையினருக்கு அந்த சுவையை கொடுப்பதும் தான்.

கடிதம் தமிழில் இருந்தால் நலம் . ஓவியங்களுடனும் வண்ணங்கள் கூடிய மழலைகளின் கடிதங்களை கையில் ஏந்த ஆவலுடன் காத்திருக்கின்றேன். கடிதம் எழுதியவுடன் ஒரு பிங் செய்யவும் வீட்டு முகவரியை அனுப்பி வைக்கிறேன். சர்வதேச கடிதங்களுக்கும் பதில் உண்டு.

No comments:

Post a Comment